வியாழன், 17 செப்டம்பர், 2009

முருகா!



முருகா! முருகா! முருகா!
மயிலில் வருவாய் முருகா!
மாம்பழம் தருவேன் முருகா!
மலர்களைத் தருவேன் முருகா!
பால்கொண்டு படைப்பேன் முருகா!
வேல்கொண்டு வருவாய் முருகா!
சேவல் கொடியோய் முருகா!
காவல் புரிவாய் முருகா!
தெய்வம் நீயே முருகா!
தேவன் நீயே முருகா!
சக்தியின் மகனே முருகா!
பக்தியில் வருவாய் முருகா!

பாத்தென்றல் முருகடியான்

1 கருத்து:

shaktisubramanian சொன்னது…

செய்யோன் என்றால் முருகன் என்று பொருள் உள்ளது. எந்தப்பாடலில் முருகனை செய்யோன் என்று கூறியுள்ளனர் . விளக்கம் தேவை.