ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

கால்!

குருவிக் கெல்லாம் ரெண்டுகால்!
குதிரைக் கெல்லாம் நான்குகால்!
மூன்று கால்கள் முக்காலி!
நான்கு கால்கள் நாற்காலி!
எட்டுக் கால்கள் பூச்சுகள்
எச்சில் வலைகள் பின்னுமாம்!
காலில்லாதப் பந்தினைக்
கண்ணன் உதைக்க உருளுமாம்!

பாத்தென்றல் முருகடியான்

கருத்துகள் இல்லை: