திங்கள், 29 ஜூன், 2009

சொல் தலைவா சொல்!


தாயும் நீ! துந்தை நீ!
தமிழும் நீ! சவையும் நீ!
பாயும் நீ! துயிலும் நீ!
பகுத்தறிவும் அறிவும் நீ!
ஓயும்நா ளில்லாமல்
உழைக்குஞ்செங் கதிரும் நீ!
நீயேயெம் உயிரென்று
நினைத்திருந்தோம் சிலர்சொல்போல்
பாயும்நந் தமிழ்ப்புலிக்குப்
பகையாநீ! சோல்தலைவா!

வெற்றியுடன் தோல்வியுற்றால்
விழிநீராய் விழுபவன்நீ!
பற்றவரும் பகைமுகத்தைப்
பார்த்தமனத் தெழுபவன்நீ!
கற்றடங்கி நின்றவரின்
கலைமனத்தை உழுபவன்நீ
நற்றமிழ்த்தாய் நலன்காக்க
நலிந்தவர்கால் தொழுபவன்நீ!
இற்றைநிலை இதுதானா?
என்பதுதான் கேள்வியினி!


பாத்தென்றல் முருகடியான்

கருத்துகள் இல்லை: