திங்கள், 15 ஜூன், 2009

துன்பம் தேடும் தோகைகள்!

கச்சை அணியாத கனமுலைகள் காற்றாட
தச்சம் செதுக்காதத் தளிர்வாழைத் தொடையாட
அச்சம் மடம்நாணம் அத்தனையும் விட்டுலவிக்
கொச்சைப் படுத்துகின்ற குமரிகளே! கேளுங்கள்…

ஓடைப் புணல்நீந்தும் மீன்களுக்கும் செதிலிருக்கு
காடை புறாக்களுக்கும் கவசமாய்ச் சிறகிருக்கு
ஆடை அரைகுறையாய் ஆபாசத் திரையரங்காய்
பாடைப்பல் லாக்குநடை பயிற்சிபெறப் போவதேன்ன?

முனிவன் மயக்கமுற மோகவுடல் காட்டுகிறீர்
இனிமை விரும்புமந்த இளையர்மனம் வாட்டுகிறீர்
கனிகள் அசைத்தவர்க்கு காமவெறி ஊட்டுகிறீர்
மணிதற் பிழந்தொருநாள் மரணத்தேர் ஓட்டுகிறீர்!

முற்றும் வெளிக்காட்டி முதியோர்க்கும் தீமூட்டிச்
சற்றும் சலனமின்றிச் சாலைகளில் உலவுகிறீர்
கற்றும் அறிவிலையோ? காற்கால மானிடமோ?
கற்பும் உயிர்பறிக்கக் காரணமே நீங்களன்றோ!

கோடி விழிகளுங்கள் கோலத்தைக் கொத்தியபின்
தேடி மணமுடிக்கும் திருவாளர் கணவருக்கும்
ஊடிச் சுவைகொடுக்க உணர்ச்சியென்ன வைத்திருப்பீர்?
காடிப் பழங்கள்ளாய்க் கைத்துவிட்ட பாலாவீர்!

ஆங்கில மோகங்கொண்டு ஆசியா அழிதல்கண்டோம்
தீங்கிலாப் பண்பாடெல்லாம் தீயிலே கருகக்கண்டோம்
மாங்குயில் மயிலைப்போன்ற மகளிரின் குணங்கள்மாறி
ஓங்குதே காமச்சிந்தை உலையுதே நல்லோருள்ளம்!


பாத்தென்றல் முருகடியான்

கருத்துகள் இல்லை: