புதன், 29 ஜூலை, 2009

நாட்டை நாடு!

ஒன்றே நாடு!
ஒன்றே மக்கள்!
ஒன்றே சிங்கப்பூர்!
என்றே பாடு!
என்றும் பாடு!
இனிக்கும் சிங்கப்பூர்!

(ஒன்றே…)

புகைத்தால் உனக்குக் கேடுவரும்!
பொய்சொன் னாலும் கேடுவரும்!
பகைத்தால் நமக்குள் கேடுவரும்!
பண்பும் பணிவும் வெற்றிதரும்!

(ஒன்றே…)

காலையில் எழுந்து குளித்துவிடு!
கடமையை உயிராய் மதித்துவிடு!
சோலையில் நடந்து பயிற்சியெடு!
சொன்னதைச் செய்ய முயற்சியெடு!

(ஒன்றே…)
பாத்தென்றல் முருகடியான்

கருத்துகள் இல்லை: