வெள்ளி, 6 மார்ச், 2009

மலைமணிச் சோதியன்!

மலையாய் வளர்ந்தும்
உளியால் உடைந்தும்
சிலையாய்ப் பிறந்த
சிவனுருவே!

முடியாய் உயர்ந்தும்
முதிலாய் எழுந்தும்
படியாய்க் கிடக்கும்
பரம்பொருளே!

மண்ணால் மறைந்தும்
மணி,பொன் கரந்தும்
தண்ணார் முகிலுடை
தரிப்பவளே!

அண்ணா மலையென
அக்கினி உலையென
பொன்னார் மேனியின்
புறவுருவே!

பைந்தமிழ்ப் பாவலர்
மீசைகள் மூலிகை
பனியுடல் முடியெனச்
சுமப்பவனே!

பாறைக ளாயிரம்
கீரைக ளாயிரம்
பாவயருக் குதவிடும்
பரமனமே!

தலைகளில் அருவியும்
தரங்கிசைச் சுருதியும்
வயல்களில் மணியுமாய்
வளர்பவனே!

பாத்தென்றல்.முருகடியான்

கருத்துகள் இல்லை: