புதன், 11 மார்ச், 2009

தமிழ்!

மல்லிகைப் புன்னகை
மந்திரக் கண்ணகை
மயக்கும் நம்மனத்தை! -தமிழ்
சொல்லிய சொல்வகை
மாணிக்கக் கல்வகை
சுட்டிடுந் தீக்குணத்தை! -தமிழ்
வீசிய வெண்பரல்கள்! -புவி
வெல்லுந் திருக்குறள்கள்! -தமிழ்
பேசிய பேச்சொலிகள்! -முகம்
வீசிடும் மூச்சொலிகள்! -தமிழ்
தேனோ? பாலோ?
தேவதை தானோ? (மல்லிகை)

வேரடி, மொழி
விருந்தடி என
வெய்ய னீன்ற மகளோ? -இந்தப்
பாரடி எங்கும்
பரவடி எனப்
பரமன் சொல்லின் துகளோ?
காலக் கணக்கில்
அகப்படாத வயதோ? -இந்த
ஞாலத் தோளை
நனைக்கவந்த புயலோ? -இவள்
பெற்றவை ஆயிரம்
மொழிக் குழந்தை
கற்றவர் சொல்லிய மருந்தை
நற்றவம் செய்திதை
நாமடைந்தோம்
நாளும் அமுதமே அருந்த -தமிழ்
தேனோ? பாலோ?
தேவதை தானோ? (மல்லிகை)

பாத்தென்றல்.முருகடியான்

கருத்துகள் இல்லை: