திங்கள், 10 ஆகஸ்ட், 2009

ஆனை!


ஆனை யைப்பார் ஆனை!
அம்மா! பெரிய யானை!
கன்னங் கரிய யானை!
கால்கள் பெருத்த யானை!

கொம்பு முளைத்த யானை!
கோவிலில் நிற்கும் யானை!
விலங்குத் தோட்ட யானை!
வித்தைக் காட்டும் யானை!

கரும்பு கேட்கும் யானை!
காது பெருத்த யானை!
தும்பிக் கையால் நம்மைத்
தொட்டுப் பார்க்கும் யானை!

பாத்தென்றல் முருகடியான்

கருத்துகள் இல்லை: