வெள்ளி, 19 டிசம்பர், 2008

கவிதை!

குரங்கென ஒருபொருள் குறிக்கிறது
குலத்தமிழ்ப் பாட்டென விரிகிறது
திறந்தருங் கதையது விளைக்கிறது
திரண்டநல் விதையதில் முளைக்கிறது
வரந்தரும் “தை”யெனும் திங்களையும்
வைத்தவள் தைத்தவள் தையலவள்!
ஆறந்தரும் முனைவரின்ழூ விளக்கமிது
அடுத்தொரு முறையிலும் விளங்குமிது!

முதலெழுத் தழித்தால் விதையாகும்
நடுவெழுத் தழித்தால் கதையாகும்
முதலும் நடுவும் அழித்தால் “தை”
வினையும் பெயரென வருவாள்தை
முதலிரண் டெழுத்தில் பாட்டுவரும்
முள்மர மேறும் குரங்குவரும்
முதல்தாய் மொழியின் பெருமையிது
மூன்றெழுத் தின்ப அருமையிது!

முனைவர்- முனைவர் சுப.திண்ணப்பன்

பாத்தென்றல்.முருகடியான்

கருத்துகள் இல்லை: