செவ்வாய், 15 செப்டம்பர், 2009

அகரம் அம்மா!


அம்மம்மா
காலையிலே
எழுந்தம்மா
ஆசைமுத்தம்
தருவாளே!
நம்மம்மா
இரவம்மா
நடந்துவிட்டால்
பகலம்மா!
ஈகாட்டிப்
பல்விளக்கு
நல்லம்மா!
உன்னம்மா
உனக்காகத்
தோசைசுட்டாள்!
ஊட்டிவிட்டாள்!
தலைசீவிப்
பின்னிவிட்டாள்!
ஐயம் வந்தால்
அப்பாவைக்
கேளம்மா!
ஒற்றுமையாய்க்
கொடி வணங்கிப்
பாடம்மா!
ஓடிப்பாடி
விளையாடி
ஆடம்மா!
ஔவை போல்
நம்பாட்டி
தேடிடுவாள்!
அம்மா அப்பா
தெய்வமெனக்
கூறிடுவாள்!

பாத்தென்றல் முருகடியான்

கருத்துகள் இல்லை: