புதன், 2 செப்டம்பர், 2009

எண்ணம்மா! எண்ணு!

அம்மா ஒண்ணு!
அப்பா ஒண்ணு!
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு!

அன்பாய்ப் பாடம்
சொல்லும் எங்கள்
ஆசான் வந்தார் மூணு!

அக்கா கண்ணு
அண்ணன் கண்ணு
ரெண்டும் ரெண்டும் நாலு!

ஆனை பூனை
மானைக் பார்த்தால்
வாலும் காலும் அஞ்சி!

ஆறும் ஓடும்
அணிலும் ஓடும்
அஞ்சும் ஒண்ணும் ஆறு!

வானுல் வந்த
வில்லில் தோன்றும்
வண்ணம் கண்டால் ஏழு!

தாத்தா பாட்டுப்
பாடும் போது
தட்டும் தட்டு எட்டு!

எட்டி எட்டி
நடந்த தம்பி
லட்டு தின்பான் ஒன்பது!

பஞ்சுக் கையில்
காலில் விரல்கள்
அஞ்சும் அஞ்சும் பத்து!

பாப்பா தம்பி
சிரிக்கும் போது
பல்லும் முத்து முத்து!

பாத்தென்றல் முருகடியான்

1 கருத்து:

உமா சொன்னது…

அய்யா வணக்கம்! அன்னைத் தமிழில்
கொய்யா கனிதாம் குழந்தை கட்கெல்லாம்
பாடி பாடிப் பாடம் சொன்னீர்,
பாடி யாடிப் படித்திட் டாலே
பாடம் யாவும் பதியும் மனதில்.
பள்ளிக் குழந்தைகள் போடும் கணக்கு
பாசத் தோடு பண்பைக் கொடுக்கும்,
பொல்லாக் கணக்கும் புரிந்திடும் அவர்க்கு
எல்லாக் கலையும் எளிதாய் கைவரும்
பிள்ளைகள் எல்லாம் பிரியத் தோடு
ஊட்டியே சோறு உண்பதுபோல்
பாட்டிலே கணக்கைப் படித்திடு வாரே

அய்யா மிக அருமை. வணங்குகின்றேன்.